Saturday, 20 February 2010

பெண்ணல்ல பெண்ணல்ல :)


பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ



சிறு கைவளை கொஞ்சிடும் கொய்யாப் பூ
அவள் கைவிரல் ஒவ்வொன்றும் பன்னீர் பூ
மை விழி ஜாடைகள் முல்லை பூ
மணக்கும் சந்தனப் பூ
சித்திர மேனி தாழம்பூ
சேலை அணியும் ஜாதி பூ
சிற்றிடை மீது வாழை பூ
ஜொலிக்கும் செண்பகப்பூ

தென்றலை போல நடப்பவள்
என்னை தழுவ காத்துக்கிடப்பவள்
செந்தமிழ் நாட்டு திருமகள்
எந்தன் தாய்க்கு வாய்த்த மருமகள்

சிந்தையில் தாவும் பூங்கிளி
அவள் சொல்லிடும் வார்த்தை தேன்துளி
அஞ்சுகம் போல இருப்பவள்
கொட்டும் அருவி போல சிரிப்பவள்
மெல்லிய தாமரை காலெடுத்து
நடையை பழகும் பூந்தேரு
மெட்டியை காலில் நான் மாட்ட மயங்கும் பூங்கொடி

சித்திரை மாத நிலவு ஒளி
அவள் சில்லெனத் தீண்டும் பனித் துளி
கொஞ்சிடும் பாத கொலுசுகள்
அவை கொட்டிடும் காதல் முரசுகள்
பழத்தை போல இருப்பவள்
வெல்லப் பாகை போல இனிப்பவள்
சின்ன மை விழி மெல்லத் திறப்பவள்
அதில் மன்மத ராகம் படிப்பவள்
உச்சியில் வாசனைப் பூ முடித்து உலவும் அழகு பூந்தோட்டம் மெத்தையில் நானும் சீராட்டப் பிறந்த மோகனம்

பெண்ணல்ல பெண்ணல்ல ஊதா பூ
சிவந்த கன்னங்கள் ரோசாப்பூ
கண்ணல்ல கண்ணல்ல அல்லி பூ
சிரிப்பு மல்லிகைப் பூ



Sunday, 14 February 2010

ஆயிரத்தில் ஒருவன் - எனது பார்வை .


First half ஏன் சூப்பர் ... ரீமா சென் , "சரியான கட்டைல காட்சிகள்" . "குளிர் நேர காட்சிகள்", " உன் மேல ஆசை தான் குத்தாட்டம்" ரசிகர்கள் சொல்வது சூப்பர் ....

Second half ஏன் BORE - படத்தில் தமிழ் பேசி நடிதுள்ளர்கள் . அது எப்டி தமிழர்களுக்கு புரியும் . போர் காட்சிகள் . ENGLISH PADAM ல இப்படி வந்தா கை தட்டி பாராட்டுவோம் . தமிழ் படத்துல இப்படியா சி சி BORE. Logica இல்ல .Padam waste.


First half super ... Second half bore ... பெரும்பாலும் எல்லாரும் சொல்லும் கமெண்ட் இது .. குத்து பாட்டு இல்லை , Hero Worship இல்லை . Punch Dialogue இல்லை .
இது நாலா தான் பலருக்கு படம் பிடிக்காம போய்டோ என்னமோ ...

என்னை பொறுத்த வரை இரண்டாம் பாதியில் தான் கதையே ஆரம்பம் .
ஆம் செல்வா இத்தரை படத்தை எடுத்ததே அந்த வரலாற்று தமிழர்களுக்கு ( புலி கொடி தமிழர்கள் ) நடந்த, நடக்கும் கொடுமைகளை பதிவு செய்ய தான் என்று நினைகிறேன் .

இந்திய ராணுவம் தவறு செய்யவதாக (இறுதி காட்சிகளில் பெண்களை மானவங்கம் படுத்துவது ) போன்ற காட்சிகள் தைரியமாக சொல்ல பட்டு இருக்கிறது .1987-1990 களில் என்ன நடந்தது என்று அறிந்தவர்களுக்கு இது புரியும் . புரியாதவர்கள் சரிதரத்தை புரடுங்கள் . ராணுவம் கொத்து குண்டுகளை வீசும் போது பார்த்திபன் " இப்படை களத்தின் பெயர் என்ன . இது குறித்து சொல்லி இருந்தால் அஞ்சி விடுவோம் என்று நினைத்தீரோ " என்று சிரித்து கொண்டே உயிர் விட்டவர்கள் யாரு என்று உங்களுக்கு புரியவில்லையா ????????

Hitler Jews கொன்ற வரலாற்றை அறிந்த தமிழர்கள், தம் சொந்த இனம் தன் கண் முன்னாடியே அழிந்து கொண்டு இருக்கும் ஒரு வரலாறு தான் மறைவாக ( நேரடியாக பதிந்தால் தான் இறையாண்மை பேசி கொண்டு வரிஞ்சி கட்டிட்டு வண்டுருவாங்கலே) பதிவு செய்துள்ளார் செல்வா என்பதை புறிந்து கொள்ளாதது ஏனோ ?

... 2000 துணை நடிகர்கள் 3 வருட உழப்பை ஒரு நிமிடத்தில் உதாசின படுத்தாமல் சற்று சொல்ல பட்ட விசயத்தை புறிந்து கொள்வோம் ...

தாய் தின்ற மண்ணே
இது பிள்ளையின் கதறல்
ஒரு பேரரசன் புலம்பல்

நெல் ஆடிய நிலம் எங்கே
சொல் ஆடிய அவை எங்கே
வில் ஆடிய களம் எங்கே
கல் ஆடிய சிலை எங்கே

கயல் விளையாடும் வயல் வெளி தேடி
காய்ந்து களித்தன கண்கள்
....
புலி கொடி பொறித்த சோழ மாந்தர்கள்
எலி கறி கொறிபதுவோ
......
மண்டை ஓடுகள் மண்டிய நாட்டை மன்னன் ஆளுவதோ
......

நொறுங்கும் உடல்கள்
பிதுங்கும் உயிர்கள்
அழுகும் நாடு அழுகின்ற அரசன்
பழம் தின்னும் கிளியோ
பிணம் தின்னும் கழுகோ
....
ஆயிரம் ஆண்டுகள் சேர்த்த கண்ணீரை
அருவிகள் போலே அழுதிருப்போம்
அது வரை தமிழ் காணும் துயரம் கண்டு தலையை சுற்றும் கோலே அழாதே என்றோ ஒரு நாள் விடியும் என்றே இரவை சுமக்கும் நாளே அழாதே

எந்தன் கண்ணின் கண்ணீர் கழுவ என்னோடழும் யாழே அழாதே

இந்த அழுகை உங்களுக்கு BORE அடிக்குது என்றால் இப்பதிவும் உங்களுக்கு BORE தான்.

== செல்வா ஆயிரத்தில் ஒருவன் குடுத்தும் எம் மக்களுக்கு புரிய வில்லையே. ====