Sunday, 4 October 2009

இதை எல்லாம் நீங்க ரசிச்சதுண்டா ?????????

சிறிய விளம்பர இடைவேளை ன்ன உடனே Channel மத்ரவங்களா நீங்க ? விளம்பரத்ல வர்ற சின்ன சின்ன விசயத்த நோட் பண்ணுங்களேன் சேனல் மாத்தாம... ச்ச எவ்வளவு அழகான ரசனைய விட்டிட்டு mega seriallaye மூழ்கி இருகோம்னு தெரியும் !!!!!!!!!!

எனக்கு தெரிஞ்ச பல பேர் எதாவது தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இடைவேளையின் போது ரொம்ப சலித்துக்கொள்வார்கள் " இப்படி விளம்பரமா போட்டு கொல்றானே " என்று... ஆனா நீங்க நல்லா கவனிச்சு பாத்தீங்க நா தெரியும் சில விளம்பரங்கள் நீங்க பார்க்கும் நிகழ்ச்சியை விட சுவாரசியமாய் இருக்கும்..உதாரணத்திற்கு சொல்லவேண்டும் என்றால்...

1) கரை நல்லது விளம்பரம் :
தன் தங்கையை கீழே விழ வைத்ததற்காக சேறு கூட சண்டை போடும் சிறுவன்.

2) இன்று இறந்து போன செல்லப்ப்ரானியின் நினைவில் இருக்கும் ஆசிரையிடம் நாய் போல் பாவனை செய்து மகிழ்வூட்டும் சிறுவன்.


3) என் தம்பிக்கி கல்யாணம்னு சந்தோசமா எல்லார்கிட்டயும் போன் செஞ்சி சொல்லும் Prakash raj Vodafone விளம்பரம் ......

4) இன்னொரு கைலயும் அடிங்க அடுத்த பால் லையும் சிக்ஸர் அடிப்பேன்" என்று நம்பிக்கையோட சொல்ற பையன்....

5) தன்னுடைய உண்டியலை வங்கிக்கு பத்திரமாக எடுத்துசெல்லும் சிறுவன்.

6) மழை பெய்யும் . ஒரு பொண்ணு தனியா காதித கப்பல மூழ்க விடாம கை வச்சி மழை அது மேல படாம பாத்துக்கும்... then நண்பர்கள் 5 பேரு சேந்து மூழ்கிவிடாம தடுபாங்க !!! எவ்ளோ அழகான Airtel special 5 Add.

7) உலகத்துல மிக நீளமான பாலத்த என்னால கட்ட முடியும்னா அத என்னால தொறந்து வைக்கவும் முடியும்னு சொல்ற Engineeer ....

8) இன்னும் ரெண்டு சக்கரம் தான் வித்யாசம் uncle இன்னும் கொஞ்ச நாள்ல அதுவும் வந்துடும் னு சொல்லிட்டு cycle a போற பையன் .....
இன்னும் நிறைய


.....இந்த மாதிரி சின்ன சின்ன விசயத்தையும் ரசிச்சி பாருங்களேன் :):):):)

Friday, 4 September 2009

யார் இவர்கள்??


சொரனையே இல்லாத காட்டெருமை நாங்கள்.

ஓட்டு போட மட்டுமே படிக்க வைக்கப்பட்ட பதுமை நாங்கள்.
ஏமாந்தாலும், ஏமாற்றினாலும் புரிந்துகொள்ளாத புழுவினம் நாங்கள் தான்.
சலுகைகளுக்கு சல்யூட் அடிப்பதே எங்கள் கடமை.
லட்டி கம்புக்கு பயப்படுவதே எங்கள் கண்ணியம்.
அரசியலை படிப்பதோடு மட்டுமே எங்கள் கட்டுப்பாடு.
கூத்தாடிகளுக்கு கை தட்டுவதே எங்கள் பிறவி பயன்.
ஈழம் என்று படம் வந்தால் பாற்போம்,
நாலு சண்டையும் ஐந்து குத்து பாட்டும் இருந்தால் அமோக வெற்றி பெற செய்வோம்.
அதில் ஹீரோவாய் வந்தவனுக்கு உயிரையும் கொடுப்போம்.

தொப்புள் கோடி உறவாவது, தூர தேச தமிழனாவது.
அம்மா, மனைவி தாலி கூட அடகு வைக்கும் வீரம் எமக்கு
என்ன நடந்தாலும் மறக்கடித்துக் கொள்ள டாஸ்மாக்.
இனி யார் யாரோடு சேர்ந்தால் என்ன?
என்ன என்ன உளறினாலும் என்ன?
நான் உளற கட்டிங் கிடைத்தால் போதும்.
வாங்கி கொடுப்பவருக்கு என் வாக்கு மட்டுமல்ல,வாழ்க்கையும் தர தயார்!

~ இப்படிக்கி யார் இவர்கள் என்று நான் சொல்லி தான் உங்களுக்கு தெரியனும்னு அவசியம் இல்ல உங்கள் மனசாட்சி பதில் சொல்லட்டும் ..

Sunday, 9 August 2009

காக்கைக்கு தெரிஞ்ச உண்மை ..


யாருபா சொன்னா அண்ணாதுரை நாத்திகவாதி னு ....இல்லைங்குது காக்கா அதோட எச்சத்தால் அண்ணாவுக்கு போட்ட நாமம் !!!!!!!!!!!
------அய்யா கறை வேட்டிங்கலே மொதல்ல இந்த கறைய தொடைங்க ------------

ஆகா என்ன நட்பு !!!!!




"காக்கா கதை"

ஒரு மரத்தில காக்கா வெட்டியா உட்கார்ந்து இருந்துச்சாம். அங்க வந்த முயலு கீழருந்துகிட்டு"ஏன் காக்கா வெட்டியா உட்கார்ந்திருக்கே. வேற எதுவும் வேலை இல்லையா"ன்னு கேட்டுச்சாம்.

அதுக்கு காக்கா "அதெல்லாம் இருக்குது, நான் சும்மா தான் உட்கார்ந்திட்டிருக்கேன். நீ உன் வேலைய பாரு"ன்சாம். உடனே முயலும் ரோஷமாகி "நானும் வெட்டியா இப்படி தான் உட்காருவேன்"னு சொல்லிட்டு மரத்துக்கு கீழ சும்மாவே உட்கார்ந்துச்சாம்.
அந்த நேரம் பார்த்து அங்க வந்த வேட்டைக்காரன் முயல் ஓடாம சும்மா உட்கார்ந்திருந்ததைப் பார்த்துட்டு ஈஸியா புடிச்சுட்டு போயிட்டானாம்.

ss1

moral of the stroy: மக்கா உனக்கு மேல இருக்குற டேமேஜர் வேலையே செய்யலனாலும் பிரச்சனை இல்ல....நீ உன் வேலையை செஞ்சே ஆகனும்டா மக்கா...

சிரிக்கலாம் வாங்க :)

---------------------------------------------------------------------------------------

செக்யூரிட்டி வேலை கேக்கறியே... உனக்கு என்ன தகுதி இருக்கு..?"

"சின்ன சத்தம் கேட்டாகூட உடனே முழிச்சுப்பேன் சார்!"

---------------------------------------------------------------------------------------

எதுக்கு மேனேஜர் உன்னை திட்டினார்?

மேனேஜரோட நாயைக் காணோம்னு பேப்பர்ல அட்வர்டைஸ்மென்ட் கொடுக்க சொன்னார். நான் 'மேனேஜர் நாயைக் காணோம்'னு அட்வர்டைஸ்மென்ட் கொடுத்துட்டேன்.


---------------------------------------------------------------------------------------

டீக்கடைக்காரர் கபடி விளையாண்டால்,

எப்டி எப்டி விளையாடுவார்?

கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ, கப் டீ...........

---------------------------------------------------------------------------------------

டீச்சர் : மனுஷனா பொறந்தா எதாவது சாதிக்கணும்.

நம்ம பய: நல்ல வேல, ,, நான் குழந்தையா தான் பொறந்தேன்
டீச்சர் ...???

---------------------------------------------------------------------------------------

மகன்: "கல்யாணம் செஞ்சா எவ்வளவு செலவாகும்ப்பா?"

அப்பா: "தெரியலப்பா... இன்னமும் செலவு செஞ்சிகிட்டுதான் இருகேன்!!

---------------------------------------------------------------------------------------

சாப்பாட்டுக்கு முன்னாடி சாப்பிட வேண்டிய மருந்தை சாப்பாட்டுக்குப் பின்னாடி குடிச்சிட்டேன்!

அடடா... அப்புறம்?

மறுபடியும் ஒரு தடவை சாப்பிட வேண்டியதாயிடுச்சு!


---------------------------------------------------------------------------------------

டாக்டர் : கர்ப்பமா இருக்கும்போது மெகா சீரியல் பாக்காதீங்கன்னு சொன்னேனே. . . கேட்டீங்களா?

பெண் : ஏன் டாக்டர் என்ன ஆச்சு!

டாக்டர் : பொறந்த உடனேயே உங்க குழந்தை, என் அம்மா வயித்த கிழிச்ச உன்னை பழிக்குப் பழி வாங்காம விடமாட்டேன்னு சொல்லுது

---------------------------------------------------------------------------------------

சிரிக்கவும்/சிந்திக்கவும்.

ஆபிரகாம் லிங்கன் அவருடைய ஷீவிற்கு பாலீஷ் போட்டுக் கொண்டிருந்தார்.

அப்போது அங்கே வந்த ஒருவர், "சார், உங்கள் ஷீவிற்கு நீங்களேதான் பாலீஷ் போடுவீர்களா?" என்று கேட்டார்.

லிங்கன், " ஆமாம். நீங்கள் யார் ஷீவிற்குப் பாலீஷ் போடுவது வழக்கம்? " என்று திருப்பிக் கேட்டார்.

---------------------------------------------------------------------------------------

கச்சதீவு கடல் பகுதியில் பழுதாகி நின்ற படகை கயிற்றினால் கட்டி இழுக்கும் பணியில் மீனவர்கள் ஈடுபட்டிருந்தபோது ஹோவர் கிராப்ட் கப்பலில் அங்கு வந்த இந்திய கடலோர காவல் படையினர் பழுதாகி நின்ற படகை பார்வையிட்டனர். இந்நேரத்தில் அங்கு கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த இலங்கை கடற்படையைச் சேர்ந்த இரண்டு கப்பல்கள், ஹோவர் கிராப்ட் கப்பலை நோக்கி வேகமாக வந்தன. கப்பலில் வந்த இலங்கை கடற்படையினர் ஹோவர் கிராப்ட் கப்பலில் இருந்த இந்திய கடலோர காவல்படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதைத் தொடர்ந்து கடலோர காவல் படையினர் கைகளை தூக்கியபடி நின்றனர் - உண்மை செய்தி
.......................................................................................

இலங்கை ராணுவம்கேப்டன்: ஐயா நான் உங்கள அடிச்சிருக்கனே....
இந்திய கடலோர காவல்படை:எப்பம்மா ?
இலங்கை ராணுவம் -நல்லா யோசிச்சு பாருங்க !!!!!!!
இந்திய கடலோர காவல்படை- பாகிஸ்தான் பாடர்ல சும்மா குக்கு கும்முன்னு கும்மினிங்களே அந்த குருப்பா ?
இலங்கை ராணுவம் -இல்லய்யா
இந்திய கடலோர காவல்படை- அந்த சீனா கடல் பகுதியிலவச்சு பின்னு பின்னுன்னு பின்னி எடுத்திங்களே அந்த குருப்பா ?
இலங்கை ராணுவம் -இல்ல கேப்டன் ஐயா..
இந்திய கடலோர காவல்படை- எந்த குருப்பா இருக்கும் ,ஒண்ணுரெண்டு எடத்துல வாங்கிருந்தா பரவாஇல்ல நம்மதான் போர எடம் எல்லாம் வாங்கிருக்கமே .டேய் அந்த கச்ச தீவு பக்கம் மூத்திர சந்து மாதிரி இடத்துல சும்மா கொதரி தள்ளினீங்களே அந்த குருப்தானே
இலங்கை ராணுவம் -ஆமா கேப்டன் ஐயா.
இந்திய கடலோர காவல்படை-ஒங்ககிட்ட ஒத வாங்கினதுகப்புரம் எவன் அடிச்சாலும் தாங்குர சக்தி வந்துச்சி...
இலங்கை ராணுவம் -அது இல்ல கேப்டன் இவ்வள்வு அடிய வாங்கிகிட்டு எப்பிடி உயிரோடி இருக்கிங்க ?
இந்திய கடலோர காவல்படை- அதனாலதானெட எங்கள ரெம்ப நல்லவன்னு சொல்லுராங்க
;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;;

bush அடாவடிகளை பார்த்து ஆத்திரப்பட்ட ஒருவர் தந்தி அடித்தாராம் நீங்கள் எல்லாம் நரகத்திற்கு தான் போவீர்கள் அங்கே உங்களை எண்ணை சட்டியில் போட்டு வறுத்து எடுபார்கள் என்று.

தந்தியை படித்ததும் உடனடியாக தன் உதவியாளரை அழைத்தார் புஷ் "நரகம் என்றால் என்ன?" என்றார். "அங்கு எண்ணை சட்டியில் வறுத்து எடுபார்கள் என்பது உண்மையா?" என்று புஷ் கேட்க "ஆமாம், அது ஒரு மத நம்பிக்கை " என்றார்.உடனே புஷ் சொன்னாரம் "உலகத்தில் பாவம் செய்பவர்கள் தான் அதிகம். இத்தனை பேரையும் போட்டு வருதெடுகிற அளவு எண்ணை இருக்கிறது என்றால், ஒ! மை காட்,நாம் ஏன் ஈராக் மீது போர் தொடுக்க வேண்டும்? நியாயமாக பார்த்தால் நரகத்தை அல்லவா கைப்பற்றி இருக்க வேண்டும் ?"

Saturday, 30 May 2009

நம்ம சென்னை ல 2 வருஷம்

30-05-2007 அன்னைக்கி சென்னை கத்தி பாரா ல காலை ல 7 மணிக்கி இறங்கினேன். எழுதாப்ள Lee Royal Meridian.வாய போலந்து கொஞ்ச நேரம் பாத்துட்டு இருந்தேன் . உடனே சுத்தி 6 7 ஆட்டோ அண்ணன்ஸ். எங்க சார் போகணும்னு . Race course போகணும் அண்ணேன். 1 km தான் இருக்கும் . வழக்கம் போல் சுத்தி கூட்டிட்டு போய் வழில என்னபோல இளிச்ச வாயேன் ஒருத்தன் மாட்னான் . ஆக மொத்தம் ஆளுக்கு 60 ரூபா னு 120 ரூபா . சென்னை ல 1 Km வர 120 ரூபாவா. ?? ஆட்டோ ஸ்டேஷன் வழியா போகும்போது Electric Train பாத்தேன். என்னடா இது !!! டவுன் பஸ்ல தொங்கற மாதிரி ரயில்ல தொங்கிட்டே போறனுங்க னு நினச்சிட்டே இந்த பக்கம் திரும்பினா 9M பஸ்சு. 100 பேறு 1 பஸ்ல போகலாம்னு அன்னிக்கி தான் தெரிஞ்சிச்சி,,,,

 

2 நாளைக்கி முன்னாடி தான் மொழி படம் பாத்து இருந்தேன். அதுல வர்ற flats மாதிரி சென்னை ல தங்க போறோம்னு நினச்சி ரூம் முன்னாடி இறங்கினேன். மொத்தம் 10 ரூம் . 2 ஆவது மாடிகி Manager னு ஒருத்தன் அங்க கூட்டிட்டு போனான்.

 

தீ பெட்டி மாதிரி 1 ரூமு. அதுல 3 பேரு . ஆளுக்கு 1000 ரூபா !!!! இந்த ரூமுக்கு தான் Manager போன்ல அவ்ளோ build up கொடுத்தானா னு நினச்சேன் . ஊர்ல வீட்ட சுத்தி தோட்டம் 2BH 1000 ரூபா தான் .  பக்கத்துலயே Super மெஸ் இருக்கு னு காட்னா . மெஸ் லட்சணமோ Supero Super.

 

மொத நாளு கம்பனிக்கு 7 1/2 மணி பஸ்சுக்கு 7 மணிக்கே stop புக்கு போயாச்சி .. கிண்டி பஸ் stop ல நிக்கேன் . மொத தடவ ரெட்டை மாடி பஸ் ... வானத்துல ரொம்ப பக்கத்துல kingfisher aeroplanu . அடேங்கப்பா !!! டேய் ரவி வானத்த பாக்காதடா வெளியூர் காரேன்னு கண்டு பிடிசிருவானுங்க நினச்சி தலைய குனிஞ்சேன் .

 

கப்பல் மாதிரி கம்பெனி பஸ் வந்துச்சி .. உள்ள ஏறுனேன் ... சில்லுனு இருந்திச்சி ..பாத்தா AC Bus. எல்லாரும் உள்ள தூங்கிட்டு இருந்தாங்க . என்னடா காலங்காத்தால எல்லாரும் தூங்குறாங்க நினச்சிட்டே உள்ள பொய் ஒரு seat ல உக்காந்தேன். Colleguku conductorta திட்டு வங்கிடே வாச படில உக்காந்து போவயேடா இப்போ AC Bussu mmmmmm ஜமாய் !!!!

 

வழில அண்ணா University .. HCL 15 மாடி கட்டடம் . ஊர்ல 5 மாடி Janakiram hotellayae பெருசுன்னு நினைச்சோம் . இங்க 15 மாடியா????????? TCS, CTS, WIPRO, SATYAM இன்னும் பல கம்பெனி, ஆனா ஒன்னு மட்டும் புரியல!!! ஏன் எல்லாரும் தூங்கிட்டே போறாங்கனு !!! (இப்போ ரொம்ப நல்லா புரிஞ்சிட்டு)...

 

week end வந்தாச்சி....போனோம் Marina ... என் frienduku ஒரு doubt வந்துச்சி . மாப்ள இந்த ஊர்ல ஏன்டா எல்லா பொண்ணுங்களும் ஷால் ல முஞ்ச மூடிட்டு போறாங்க !!! இல்லனா கழுத்துல மட்டும் போடறாங்க நு கேட்டான் ??? மாப்ள நமக்கு எதுக்குடா வம்பு !!! நாமே இத யார்டயாவது கேட்டா உன் பார்வை தப்பு ன்னு வாங்க !!!! அவங்க எப்படியும் போட்டும்..நம்ம வேலைய பாப்பும் மாப்ள னுட்டு beach சுத்திட்டு வந்தாச்சி !!!


மொத மாசம் சம்பளம் 7289 ரூபா !!!! அன்னிக்கி officla லேடா தான் விட்டாங்க !!! நைட் 10 மணிக்கி நேரா TNagr Pothys போனோம்.கடை கிட்ட தட்ட பூட்டி யாச்சி.. அப்பாக்கு ஒரு சட்டை , அம்மாக்கு ஒரு சேலை , தாதா கு ஒரு வேட்டி ஆச்சி கு ஒரு சேலை ன்னு வாங்கிட்டு friendsuku ஒரு குட்டி treat. உழச்ச காசு கைக்கு வந்து எல்லாருக்கும் எதாவது வங்கி கொடுக்கிற அந்த நிமிஷம் அடைஞ்ச சந்தோசம் :) :) :) .... உலகத்தையே வாங்கிட்ட சந்தோசம் இந்த சென்னை ல தான் கிடைச்சது ...

 

இதே சென்னை ல தான் என் friendoda N-70 பஸ்ல போகும்போது ஆட்டைய போட்டானுங்க !!! வீட்ல வெளில இருந்த என் canvas , T-shirt - வீட்டு பூட்டு எல்லாம் அபேஸ் பண்ணானுங்க !! Traffic policu atleast 10 ரூபா வது கொடுத்துட்டு வண்டி எடுத்துட்டு போடா ன்னு சொன்னப்ப !! அப்பெல்லாம் என்னடா ஊருன்னு தோணிச்சி !!!


கண் தெரியாதவங்க கூட ரிமோட் கவர் , ரேஷன் கவர் ன்னு வித்து வைத்த கழுவறது இந்த ஊர்ல தான் . கடா மாடு மாதிரி இருந்தும் pick pocket, திருட்டு ன்னு வாழ்கை நடத்துறதும் இந்த ஊர்ல தான்.

 

toilet la கூட டிவி இருக்குற satyam theatre (Busya piss அடிக்கிற நேரத்துல எடுகுடா TV).

காஞ்ச ரொட்டில ஜாம் தடவி தர்ற Pizza Corner (Kadalai corner),

அவுத்து உட்ட கழுதைங்க ஜோடியா romance பண்ணும் Marina Beach, Besant Ngr Beach, Gandhi mandabam, Children's (உருவாகிற)  Park ..

500 ரூபா பொருள கூட 5000 ரூபான்னு விக்கிற City centre, Spencer etc..

50 ரூபா பொருள 500 ரூபா கொடுத்து வாங்கினா தான் மதிப்பு ன்னு நினைக்கிற மக்கள்!!!

 

100 ரூபாவா சம்பாதிச்சிட்டு 70 ரூபாவ TASMAC கே கதின்னு கிடகிரவங்க. ஊத்தி கொடுக்கும் அரசாங்கம் இருக்கும் கோட்டை !!!

ஒவ்வரு கலர் போர்டுக்கும் ஒவ்வரு ratela டிக்கெட் .

25 ரூபாக்கு unlimited சாப்பாடு போடும் Andra Mess. (வாழ்க)

தாங்களே தெய்வம் தாங்க வச்சது தான் சட்டம்னு நினைக்கும் வீட்டு owners. ஒரு unit currentuku 4, 6 ரூபா வாங்கும் high class பிச்சை காரங்க !!!!

100 % ozonated pure drinking water nu கிழிஞ்சி தொங்கும் label ஓட்டுன வாட்டர் கேன்ஸ் .

சென்னையின் நரம்பான electric train, Share auto,

 

இது எல்லாம் எங்கள் சென்னையின் சொத்து ........

உந்தன் தேசத்தின் குரல்

Saturday, 23 May 2009

எங்களை மன்னிக்கட்டும்.


எதற்கும் அழவில்லை,
எதை நினைத்தும் வெட்கமில்லை
உதிர சொந்தமெல்லாம் உயிரற்று மடிகிறது
பச்சைப் பிள்ளையை பசி தின்று பசியாறுகிறது
கண்ணீரும் இரத்தமும் இந்து மஹா சமுத்திரத்தின் இன்னொரு துணை நதியாய் போகிறது.
படை திரட்டி போர் பரணி பாடிய எம் குல தெய்வம் பதுங்கி எங்கோ வாழ்கிறது
துரோகமும் குரோதமும் செழித்து எங்கும் படருது
எதற்கும் அழவில்லை,எதை நினைத்தும் வெட்கமில்லை
இத்தனை கொடுமைகளை தெரிந்தும் படித்தும் ஒன்றுமே செய்ய முடியாமல் இருக்கிறோமே
இந்த கொடுமை எண்ணி தான் நெஞ்சு வெடித்து கிடக்கிறோம்;
நிஜமாகவே ராஜராஜ சோழனும் ராஜேந்திரனும்அவர்களின் புலிக்கொடியும் எங்களை மன்னிக்கட்டும்.

நீங்கள் எங்களை மன்னித்தாலும் வரலாறு எங்களை மன்னிக்காது.

Saturday, 11 April 2009

வாசித்த வரிகளில் நேசித்த வரிகள்...

எப்படி உங்களால் முடிகிறது?

எப்படி உங்களால் முடிகிறது
கற்ற பின் கிராமங்களை காலி செய்தல்
தென்றல் தழுவிய ஒற்றையடி பாதை
பனை மரத்தடியில் மழைக்கு ஒதுங்கியது
கோழி கூவலில் விடிந்த காலை பொழுது
இரவு நிலா சோறு..
மொட்டை மடி கட்டான் தரை தூக்கம் 
பாப்பாவின் முத்தம், பள்ளி தோழன்
பிடித்த தட்டான் பூச்சிகள், கோவில் திருவிழாக்கள்
இரயில் பாதையில் நண்பர்களுடன் நடந்த மாலை பொழுது
ஆலம் விழுதில் தொங்கியது
தாத்தா வாங்கி தந்த முட்டாய்
பாட்டி கதை சொல்லி தூங்கிய இரவுகள்
கோழி விரட்டி திருடிய முட்டை...
எப்படி உங்களால் மட்டும் இதனை மறந்து
நகரத்தில் வாழ முடிகிறது..?

லஞ்சம்
வாங்கினேன்! பிடித்து விட்டார்கள்
கொடுத்தேன்! விட்டுவிட்டார்கள்.

வாழ்க்கை
சலவைச் சட்டைக்குள்
சல்லடை பனியன்.

தோல்வி
விதைக்கும் நேரத்தில் தூங்கியவன் நீ!
அறுவடை நேரத்தில் ஏன் அழுகிறாய்?

கோலம்
கருப்பு வளையல் கையுடன்ஒருத்திவளைந்து, நெளிந்துப்பெருக்கிப்போனாள்,
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.

சாமி
எங்கள் குடிசையில்அடிக்கடி சாமி ஆடுவாள்அம்மா ஏனோ தெரியவில்லைஅன்றும் இன்றும்குடிசைக்கே வருகிறது சாமிமாடிக்கே போகிறது வரம்

கொலை
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு...விரியுமுன்பே பறித்துஇனறவனுக்கு அர்ச்சனைசெய்கிறான்நூறாண்டு வாழ்ககை வேண்டிதனக்கு

-காசிஆனந்தன்

மனிதன்
இவன் பசுவின் பாலைக்கறந்தால்பசு பால் தரும் என்கிறான்.காகம் இவன் வடையை எடுத்தால்காகம் வடையை திருடிற்று என்கிறான்இப்படியாக மனிதன்....

கூண்டு
விடுதலை ஆவாரா சிறையில்இருந்து என்கணவர்?சோதிடம கேட்கிறாள்கூண்டுக்கிளியிடம்

யாமிருக்க பயம் ஏன்
ஆறுபடை முருகன் கோவிலுக்கு ஏலு பூட்டு........ ''யாமிருக்க பயம் ஏன்''

படிப்பு
தலைகுனிந்துஉன்னைபடித்தேன்!இன்று பலர்என்னைதலைநிமிர்ந்துபார்க்கச்செய்தாய்!


Saturday, 21 March 2009

கதை கேளு, கதை கேளு!


கதை கேளு, கதை கேளு!

(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)

ஒரே ஒரு ஊரிலே 
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.


அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
( .................. ................. ............... )


தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.


மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு; 
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.


வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;


விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்; 
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!


கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள் 
விளையாட்டாய் தண்ணியடித்தான்.

Sunday, 15 March 2009

சுஜாதாவின் TEN COMMANDMENT

இது "குமுதம்" பத்திரிக்கையில் சுமார்12 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது
----------------------------------------------------------

சுஜாதாவின் 'வயது வந்தவர்களுக்கு' .... உலகில் மிகச்சுலபமான வேலை அறிவுரைப்பது. கஷ்டமான வேலை, கடைப்பிடிப்பது. திருவள்ளுவர் காலத்திருந்து தமிழில் இருக்கும் அறிவுரை நூல்களுக்கு, தமிழ்நாட்டில் இன்று ஒரு அயோக்கியன் கூட இருக்கக்கூடாது. பதினாறிலிருந்து பத்தொன்பது வயது வரைதான் இளைஞர்கள். அதன்பின் அவர்களுக்கு முதிர்ச்சியும் பிடிவாதாமும் வந்து அவர்களை மாற்றுவது கஷ்டம். பதினாறே கொஞ்சம் லேட் தான். அஞ்சு வயசிலேயே ஒரு குழந்தையின் குணாதிசயங்கள் முழுவதும் நிலைத்துவிடுகின்றன என்று மனோதத்துவர்கள் சொல்கிறார்கள். இருந்தும் பதினாறு ப்ளஸ்-யை முயற்சிப்பதில் தப்பில்லை. இந்த அறிவுரைகள் இரு பாலருக்கும் பொது(ஆண்-பெண்) இனி அவை.


1. ஒன்றின் மேல் நம்பிக்கை வேண்டும், எதாவது ஒன்று. உதாரணம் கடவுள், இயற்கை, உழைப்பு, வெற்றி இப்படி எதாவது ஒரு நம்பிக்கை நங்கூரம் போல. கேள்வி கேட்காத நம்பிக்கை. கேள்வி கேட்பது சிலவேளை ரொம்ப இம்சை. நவீன விஞ்ஞானம் அதிகப்படியாகக் கேள்வி கேட்டு இப்போது தவித்துக் கொண்டிருக்கிறது.


2. அப்பா, அம்மா இரண்டு பேரும் வேலை சொல்வது பல சமயங்களில் கடுப்பாக இருக்கும். ஒருமாறுதலுக்கு அவர்கள் சொல்வதைச் செய்து பாருங்கள். அவர்கள் கேட்பது உங்களால் செய்யக்கூடியதாகவே இருக்கும். ஏழுகடல் கடந்து அசுரனின் உசிர் நிலையைக் கேட்க மாட்டார்கள். பொடிநடையாகப் போய் நூறு கிராம் காப்பி பவுடர் (அ) ரேஷன் கார்டு புதுப்பித்தல் இப்படித்தான் இருக்கும்.


3. முன்று மணிக்குத் துவங்கும் மாட்டினி போகாதீர்கள். க்ளாஸ் கட் பண்ண வேண்டி வரும். தலைவலி வரும். வெளியே வந்ததும் பங்கி அடித்தாற்போல் இருக்கும். காசு விரயம். வீட்டுக்குப் போனதும் பொய் சொல்வதற்கு ரொம்ப ஞாபக சக்தி வேண்டும். இந்த உபத்திரவத்துக்கு உண்மை சொல்லி விடுவது சுலபம். மாட்டினி போகாமல் இருப்பது அதை விட. கிளர் ஓளி இளமை என்று ஆழ்வார் சொல்லும் இளமை, ஓளிக் கீற்றைப் போல மிகவும் குறைந்த காலம், அதை க்யூ வரிசைகளிலும் குறைபட்ட தலைவர்களுக்காகவும் விரயம் செய்யாதீர்கள்.


4. நான்கு பக்கமாவது ஒரு நாளைக்குப் பொது விஷயங்களை படியுங்கள்.பொது விஷயங்கள் என்றால் கதை சினிமா, காதல் இல்லாதவை. உதாரணம் - யோக்கியமான செய்தித்தாள், மற்றபேரைப் பற்றிக்கவலைப்படும் பத்திரிகைகள் அல்லது லைப்ரரியிலிருந்து ஒரு புத்தகம் நான் ஒரு நாளைக்கு நாலு பக்கம் தான் படிக்கிறேன். அதுவே வருஷத்துக்கு ஆயிரத்து ஐந்நூறு ஆகிவிடுகிறது.


5. ஐந்து ரூபாய் சம்பாதித்துப் பாருங்கள்.சொந்தமாக உங்கள் உழைப்பில், முயற்சியில். யோக்கியமாக, மனச்சாட்சி உறுத்தாமல். அடுத்த முறை அப்பாவிடம் முன்னூறு ரூபாய்க்கு ஸ்னீக்கர்ஸ், சுடிதார் கேட்கு முன்.


6. இந்தப் பத்திரிகையைப் படிக்கும் நிலைமை பெற்ற நீங்கள் இந்திய சனத்தொகையின் மேல்தட்டு ஆறு சதவிகித மக்களில் ஒருவர். அன்றாடம் சோற்றுக்காக அலையும், வாரப் பத்திரிகை படிக்க வசதியில்லாத கோடிக் கணக்கான மக்களைத் தினம் ஒரு முறை பாத்ரூமில் அல்லது படுக்கப்போகு முன் எண்ணிப் பாருங்கள்.


7. வாரத்தின் ஏழாவது தினமான ஞாயிறன்று என்ன செய்தாலும் காதல் பிஸினஸ் வேண்டாம். காதலுக்கு ரொம்பச் செலவாகும். மனம், வாக்கு, காயம், ( உடல்) எல்லாவற்றையும் ஆக்கிரமிக்கும் தீ அது. பொய் நிறையச் சொல்ல வேண்டும். வினோதமான இடங்களில் காத்திருக்க வேண்டும். இந்த வயசில் நாசமாய்ப்போன படிப்புத்தான் உங்களுக்கு முக்கியம். குறிப்பு: பெண்களை சைட் அடிப்பதும், கலாட்டா பண்ணுவதும், அவர்களுக்குக் கர்சீப் முதலியன ரோடிலிருந்து பொறுக்கிக் கொடுப்பதும், உபத்திரவமில்லாத கவிதைகள் எழுதுவதும், காதலோடு சேர்த்தியில்லை.


8. எட்டு முறை மைதானத்தைச் சுற்றி ஓடினால் எந்தச் சீதோஷ்ணமாக இருந்தாலும் நெற்றி வியர்வை அரும்பும். எதாவது தேகப் பயிற்சி செய்யவும். வெளி விளையாட்டு. கடியாரத்துக்கு சாவி கொடுப்பதோ சீட்டாடுவதோ தேகப் பயிற்சி ஆகாது. எதையாவது தூக்குங்கள் எதையாவது வீசி எறியுங்கள். உங்கள் உடலில் ஊறும் உற்சாகத்துக்கு ஓர் ஆரோக்கியமான வடிகால் தேவை. ராத்திரி சரியாகத் தூக்கம் வரும். கன்னா பின்னா எண்ணங்கள் தவிர்க்கப்படும். ஒழுங்காகச் சாப்பிடத்தோன்றும். பொதுவாகவே சந்தோஷமாக இருக்கும். யாரையும் மனத்திலோ உடலிலோ தாக்கத் தோன்றாது.


9. ஒன்பது மணிக்குள் வீட்டுக்கு வரவும். மிஞ்சிப் போனால் ஒன்பது மணி இரண்டு நிமிஷம். டி.வி.யில் அசட்டு நாடகங்கள் எல்லாம் ஓய்ந்து இந்தி ஆரம்பித்து அணைத்திருப்பார்கள். குழந்தைகள் தூங்கியிருக்கும். ஒரு மணி நேரமாவது சுத்தமாகப் பாடப் புத்தகம் படிக்கலாம். படித்த உடனே ஓரு முறை பார்க்காமல் எழுதிவிடுங்கள். ராத்திரி பிறர் வீட்டில் தங்கவே தங்காதீர்கள். அங்கிருந்து ஆரம்பிக்கும் வினை.


10. படுக்கப் போகும் முன் பத்து மிஷமாவது அம்மா, அப்பா, அண்ணன், தங்கை யாருடனாவது பேசவும். எதாவது ஓர் அறுவை ஜோக் அல்லது காலேஜில் இன்று நடந்தது. அல்லது நாய்க்குட்டி அல்லது எதிர்வீட்டில் காலாட்டி மாமா. சப்ஜெக்ட் முக்கியமில்லை. பேசுவது தான். நன்றி: குமுதம் & தேசிகன்

Saturday, 28 February 2009

திறந்தவெளிச் சுடுகாடாகும் ஈழத் தீவு!

ஈழத்தமிழருக்கு ஆதரவாக குரல் கொடுத்து, விகடனில் வந்துள்ள கட்டுரை இது. விகடனுக்கு நன்றி. இதை ஆங்கிலத்திலும் மொழி பெயர்த்து யாராவது வெளியிட வேண்டும். சிங்கள அரசின் அராஜகம், இன்னும் பலருக்கும் தெரிய வரும்!

**********************************************

மகான் ரஜ்னீஷ் சொன்ன கதை, மகிந்தா ராஜபக்ஷேவுக்கும் பொருந்தும்!

மன்னன் ஒருவனின் கனவில் மரணம் தோன்றியது. 'உன்னைக் குறித்த நேரத்தில்,குறித்த இடத்தில் சந்திப்பேன்' என்றது. அதிலிருந்து தப்பிக்க,புத்திசாலிகள் அத்தனை பேரையும் அழைத்து ஆலோசனை கேட்டான். 'இவர்கள் முடிவுக்கு வருவதற்கு முன் மரணம் வந்துவிடும்.

எனவே, உன்னிடம் வேகமாக ஓடும் குதிரையை எடுத்துக்கொண்டு ஓடிப் போய்விடு' என்று ஒரு கிழவன் ரகசியமாகச் சொன்னதும் குதிரையை எடுத்துக்கொண்டு கிளம்பினான்.

18 மணி நேரம் ஓடியது குதிரை. 'அப்பாடா... இந்த இடத்துக்கு மரணத்தால் வர முடியாது' என்று மன்னன் பெருமூச்சுவிட்டுக் கீழே இறங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். தோளில் ஒரு கை விழுந்தது. 'சபாஷ்! இந்த இடத்துக்கு நீ நிச்சயம் வருவாய் என்றுதான் காத்திருக்கிறேன்' என்று பாசக் கயிற்றை வீசியதாம் மரணம்.

அந்த எமன் வீசியது பாசக் கயிறு. சிங்கள எமகாதகர்கள் வீசுவதற்குப் பெயர் பாதுகாப்பு வளையம். 'உயிருக்குப் பயந்தவர்கள் இங்கே வாருங்கள்' என்று அழைத்து, குண்டுபோட்டுக் கொல்கிறார்கள். 
அது பாதுகாப்பான மயானங்கள்!

எத்தனை தடவைதான் ஈழத்தின் சோகத்துக்கும் கொடூரத்துக்கும் வேறு வேறான வார்த்தைகளைத் தேட! வார்த்தைகள் தீர்ந்தாலும் வதைகள் தொடர்கின்றன. 
கடைசித் தமிழன் உயிரோடு இருக்கும் வரை அது தொடர்ந்து தொலைக்கத்தான் செய்யும்!

இப்போது ராணுவத்தின் இலக்கு புலிகள் அல்ல, அப்பாவித் தமிழர்கள். 'புலிகளை ஒழித்துவிட்டால், அடுத்து தமிழர்களுக்கு எதையாவது செய்தாக வேண்டிய நிர்பந்தம் இருப்பதால், ஒட்டுமொத்தத் தமிழர்களையும் மொத்தமாக முடித்துவிட்டு, புலிகள் பக்கம் திரும்ப சிங்கள அரசு சதித் திட்டம் தீட்டுகிறது. 'அப்பாவிகளைக் கொல்லாதே!' என்று பல்வேறு உலக நாடுகள் நெருக்கடி கொடுத்ததும், அதை மறைப்பதற்கான தந்திரத்தை மகிந்தா அரசு யோசித்தது. அவர்கள் கண்டுபிடித்தது 'பாதுகாப்பு வளையம்' என்ற வார்த்தை.

பொதுவாக போர்கள் நடக்கும்போது, மருத்துவமனைகள், மத வழிபாட்டு இடங்கள், பள்ளிக்கூடங்கள் போன்ற இடங்களும் அதைச் சுற்றியுள்ள இடங்களும் 'பாதுகாப்பான இடங்கள்' என அறிவிக்கப்படும். அங்கு குண்டுகள் வீசக் கூடாது என்பது உலக நீதி. ஆனால், எல்லா அநீதிகளையும் மொத்தக் குத்தகைக்கு எடுத்துக்கொண்ட ராஜபக்ஷே அரசு, அதைப் 'பாது காப்பு வளையம்' என்கிறது.

'சில பகுதிகளைப் பாதுகாப்பு வளையமாக அறிவித்துள்ளோம். அங்கு பொதுமக்கள் வந்துவிட வேண்டும். இதற்கு 48 மணி நேரம் கெடு' என்று சிங்கள அரசு அறிவித்தது. அதாவது, மக்களை காட்டை விட்டு வெளியில் வரச் சொல்லி, கெடு விதித்தது. இதைத்தான் இங்குள்ள காங்கிரஸ் கட்சி, 48 மணி நேரப் போர் நிறுத்தம் என்று சொல்லிப் பெருமைப்பட்டது. இப்படி ஒரு தகவல் அறிவிக்கப்பட்டதுமே அப்போது
கொழும்பில் இருந்த ஐ.நா. அதிகாரி ஒருவர், 'தமிழர் வாழ்வதற்குப் பாதுகாப்பான இடம் என இலங்கையில் ஓர் அங்குலம்கூட இல்லையே? எங்கு வரச் சொல்கிறார்கள்?' என்று கிண்டலடித்தார்.

காட்டுக்குள் பல மாதங்களாக அடைந்துகிடக்கும் அப்பாவி மக்களில் சிலர், அரசாங்கத்தின் வார்த்தையை நம்பி, அந்தப் பாதுகாப்பான இடத்துக்கு வர, அங்கு போய் குண்டு போட்டுக் கதையை முடிக்கிறது சிங்கள அரசு.

இங்கு மக்கள் படும் சிரமங்கள் ஜெயவர்த்தனே காலத்தைவிடப் பல மடங்கு மோசமானது. ''எங்கள் மக்கள் முல்லைத் தீவுக் காட்டுப் பகுதிக்குள் மட்டும் இரண்டரை லட்சம் பேர் இருக்கிறார்கள். யாருக்கும் வீடு கிடையாது. குடிசை கிடையாது. வெறும் சாக்கு, பிளாஸ்டிக் பாய்களை வைத்து மரங்களுக்கு மத்தியில் இருக்கும் அகலத்தில் டென்ட் போட்டுத் தங்கி இருக்கிறார்கள்.

பெரும்பாலான நேரம் பதுங்கு குழிகளில்தான் எல்லாரும் இருக்கிறார்கள். காலைக் கடன்கள் கழிப்பது, சமையல் நேரம் தவிர மற்ற நேரம் முழுவதும் பதுங்கு குழியில்தான். இரவு பகலாக குழிக்குள் உட்கார்ந்திருக்கும் அவஸ்தையைச் சொல்லிப் புரியவைக்க முடியாது. விமானம் வரும் சத்தம்
கேட்டால், அத்தனை பேரும் பூமிக்குக் கீழே புதைந்து கிடப்பார்கள். குண்டு விழுந்தால் அப்படியே சமாதி!''

முல்லைத் தீவு மாவட்டம், தேவிபுரம், வள்ளிபுனத்திலிருந்து இடம்பெயர்ந்து அதிகாலையில் மூன்று குடும்பங்கள் வந்து சேர்ந்தன. ஐந்து மணி இருக்கும். அந்த நேரம் பார்த்து அவர்கள் மீது குண்டுகள் விழுந்தன. 19 பேர் அந்த இடத்தில் செத்துப்போனார்கள். 61 பேர் பலத்த காயமடைந்து துள்ளத் துடிக்கக்
கிடந்தனர். காயம் அடைந்தவர்களை முல்லைத் தீவு மருத்துவமனைக்குக் கொண்டுபோய்ச் சேர்த்தார்கள். மதியம் ஒரு மணிக்கு அங்கும் விழுந்தது குண்டு. காயம்பட்டு வந்தவர்கள், அங்கேயே பிணமானார்கள். இது நடந்தது கடந்த 12-ம் தேதி.

அதற்கு முந்தைய நாள் தேவிகுளம் நோக்கி நள்ளிரவு 3.15 மணிக்கு நடந்து வந்துகொண்டு இருந்த 22 பேர் குண்டுவீச்சில் செத்தார்கள். இடம்பெயர்ந்து வருபவர்கள் தாற்காலிகமாகத் தங்கியிருக்கும் கொட்டகைகள் மீதும் குண்டுகள் விழுகின்றன.
காயம்பட்டவர்கள் சிகிச்சை பெறும் மருத்துவமனைகள் மீதும் தாக்குதல்கள் தொடர்கின்றன. புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் மருத்துவமனை மீது கடந்த 6-ம் தேதி விழுந்த குண்டுவீச்சில் 61 பேர் இறந்துபோனார்கள். 'ஆஸ்பத்திரிக்குப் போனா, சாவுதான்' என்பது தமிழகத்தில் ஜோக். ஈழத்தில் அதுதான் கடைசி ஷாக்!

மருத்துவமனைகளுக்கும் எந்த மருந்தையும் கடந்த ஆறு மாதமாக வரவிடவில்லை. வந்தவை அனைத்தும் காலியாகி, வெறும் பேண்டேஜ்கள் மட்டும் வைத்து, வாசலில் பாய் விரித்துப் படுக்கவைத்துவிடுகிறார்கள். வலியால் துடிப்பவர்களைப் பார்த்து டாக்டர்கள், நர்ஸ்கள் அதிர்ச்சி அடைவதில்லை. அவர்களிடம் வேறு வழியும் இல்லை. முல்லைத் தீவு, கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள 8 மருத்துவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களை அங்கிருந்து வெளியேற கொழும்புவில் இருந்து உத்தரவு. இனி சும்மா படுக்கவைத்து கட்டுப் போடக்கூட ஆள் இருக்க மாட்டார்கள். 
இப்படி எல்லா மருத்துவமனைகளும் அறிவிக்கப்படாத சுடுகாடுகளாக மாறிவிட்டன.

மிக அதிக பாதிப்புக்கு உள்ளானவர்களைக் கப்பல் மூலம் வேறு மாவட்ட மருத்துவமனைகளுக்குக் கொண்டுபோக செஞ்சிலுவைச் சங்கம் முயற்சி எடுத்தது. முல்லைத் தீவு மாத்தளன் கடலில் இந்தக் கப்பலை ஒரு மணி நேரத்துக்கு மேல் நிறுத்த கடற்படை அனுமதிக்கவில்லையாம். சுமார் 240 பேர் மட்டும் அவசர அவசரமாக கப்பலில் ஏற்றப்பட்டார்கள். மற்றவர்கள் நொந்துபோய் அங்குள்ள மருத்துவமனையிலேயே தங்கவைக்கப்பட்டுள்ளார்கள். இதோடு செஞ்சிலுவைச் சங்கமும் வெளியேறிவிட்டது.

இன்னொரு பக்கம் பார்த்தால்....

உயிருடன் பாதுகாப்பு வளையத்துக்குள் வருபவர்கள் தனித் தனியாகப் பிரித்து அழைத்துச் செல்லப்படுகிறார்கள். இதில் முதியோர்கள், குழந்தைகள் வேறு பக்கமும் இளைஞர்கள், இளம் பெண்கள் தனியாகவும் அனுப்பப்படுகிறார்கள். சோறு, தண்ணீர் இல்லாத இடங்களில் முதியோர்கள் அவஸ்தைப்பட... இளைஞர்கள், இளம் பெண்களுக்கான சித்ரவதை இன்னொரு புறம் ஆரம்பமாகிறது.

விசாரிக்கப்போவதாக ராணுவப் புலனாய்வு அதிகாரிகள் வருவார்கள். ''இளைஞர்களை முடிந்த வரை கொடுமைப்படுத்திவிட்டுச் சுட்டுவிடுவது இவர்களின் வேலை. வேறு எதுவும் விசாரணை செய்வதில்லை. பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள், கோரங்களின் உச்சம். இளம்பெண்களின் கண்களை முதலில் கட்டுவார்கள். கைகளைப் பின்புறம் சேர்த்துக் கட்டுவார்கள். அதன் பிறகு அவர்களின் ஆடைகளைக் கிழித்து அம்மணமாக்கிவிட்டு, உதைத்து ஓடவிடுகிறார்கள். எங்கு போகிறோம்... என்ன நடக்கப் போகிறது என்றே தெரியாமல், 
பயத்தில் ஒரு பெண் ஓட, வாய்ப்பான வசதியான இடங்களில் சிங்கள மிருகங்கள் தங்கள் பாலியல் கொடுமைகளை அரங்கேற்றும். எத்தனையோ பேர் அவள் மீது விழுந்து புரண்ட பிறகு, அவள் உறுப்புகளைச் சிதைத்து சுட்டுக் கொன்றுவிடுவதுதான் அங்கு நடக்கிறது'' என்று சொல்லப்படும் தகவல்களைக் கேட்கவே நெஞ்சு நடுங்குகிறது.

அனுராதபுரம், பொலநறுவை மயானங்கள், அதை ஒட்டிய காட்டுப் பகுதிகள், வவுனியாவின் ஆள் நடமாட்டமில்லாத இடங்களில்தான் இந்தக் கொடூரக் கற்பழிப்புகள் அதிகம் நடக்கின்றனவாம். அனுராதபுரத்தில் இருந்து கொழும்புக்கு வேலைக்குப் போன சிங்களத் தொழிலாளர்கள், தங்கள் பகுதிகளில் பல பெண்களின் பிணங்கள் நிர்வாணமாகக் கிடந்ததாக வெளியில் சொன்னார்கள். வன்னியில் இருந்து தங்கள் உயிரைக் காப்பாறிக்கொள்ள வவுனியாவுக்கு அடைக்கலம் புகும் மக்களைக் காப்பாற்றுங்கள் என்பதுதான் இப்போதைய ஈழமக்களின் கோரிக்கையாக இருக்கிறது.

புலிகள் வசம் இருக்கும் புதுக் குடியிருப்பையும், அதைத் தாண்டிய முல்லைத் தீவையும் கைப்பற்றி ஏக இலங்கையை பிப்ரவரி முதல் நாள் விடுதலை செய்யப்போவதாக அறிவித்த மகிந்தா ராஜபக்ஷே அரசு, இரண்டு வாரங்களைக் கடந்த பிறகும் அந்தச் செய்தியை அறிவிக்காமல் மக்களைக் கொல்வதில் அக்கறையுடன் இயங்கி வருகிறது. 
இலங்கையில் இருக்கும் தமிழர்கள் அனைவரும் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடை யவர்கள் என்று சிங்களக் கட்சிகள் சொல்ல ஆரம்பித்துள்ளன. ஜனதா விமுக்தி பெரமுனா அமைப்பு, 'தமிழர்கள் யாரையும் விடக் கூடாது' என்று அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. அதற்குக் காத்திருந்தது மாதிரி, கோத்தபய ராஜபக்ஷே ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

''புலிகள் கட்டுப்பாட்டில் இருக்கும் மக்கள் பாதுகாப்பு வளையத்துக்குள் வர வேண்டும். அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்குவதா, இல்லையா என்று நாங்கள் இன்னும் முடிவெடுக்கவில்லை. புலிகள் தங்கள் வசமிருந்த மக்கள் அனைவருக்கும் ஆயுதப் பயிற்சி கொடுத்துள்ளார்கள். எனவே, அனைவரும்
புலிகள்தான். ஒரு குடும்பத்தில் யாரோ ஒருவர் இறந்த மாவீரராகவோ அல்லது இப்போது அமைப்பில் இருக்கும் போராளியாகவோ உள்ளார்கள். எனவே, எந்தக் குடும்பமும் எங்களுக்கும் புலிகளுக்கும் சம்பந்தம் இல்லை என்று சொல்ல முடியாது. மருத்துவமனைகளைத் தாக்குவதாகச் சொல்கிறார்கள். அதுவும் எங்களின் ராணுவ இலக்குதான்'' என்று தெளிவாக அறிவித்துவிட்டார் கோத்தபய ராஜபக்ஷே.

''இன்னும் ஐந்து மாத காலத்துக்கு நித்தமும் இந்த தாக்குதலைத் தொடர சிங்கள
தரப்பு முடிவெடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. அப்புறம் மயானக் கரைக்கு வெள்ளையடித்து ரிப்பன் கட் பண்ணப்போகிறதா ஐ.நா.சபையும் உலக சமுதாயமும்?'' என்று ஈழ மக்கள் கதறுகிறார்கள்.

அது பற்றி நமக்கென்ன கவலை?

நமக்கு இலங்கையை கிரிக்கெட்டில் ஜெயித்தது போதும்தானே!.