எப்படி உங்களால் முடிகிறது?
எப்படி உங்களால் முடிகிறது
கற்ற பின் கிராமங்களை காலி செய்தல்
தென்றல் தழுவிய ஒற்றையடி பாதை
பனை மரத்தடியில் மழைக்கு ஒதுங்கியது
கோழி கூவலில் விடிந்த காலை பொழுது
இரவு நிலா சோறு..
மொட்டை மடி கட்டான் தரை தூக்கம்
பாப்பாவின் முத்தம், பள்ளி தோழன்
பிடித்த தட்டான் பூச்சிகள், கோவில் திருவிழாக்கள்
இரயில் பாதையில் நண்பர்களுடன் நடந்த மாலை பொழுது
ஆலம் விழுதில் தொங்கியது
தாத்தா வாங்கி தந்த முட்டாய்
பாட்டி கதை சொல்லி தூங்கிய இரவுகள்
கோழி விரட்டி திருடிய முட்டை...
எப்படி உங்களால் மட்டும் இதனை மறந்து
நகரத்தில் வாழ முடிகிறது..?
வாங்கினேன்! பிடித்து விட்டார்கள்
கொடுத்தேன்! விட்டுவிட்டார்கள்.
வாழ்க்கை
சலவைச் சட்டைக்குள்
சல்லடை பனியன்.
தோல்வி
விதைக்கும் நேரத்தில் தூங்கியவன் நீ!
அறுவடை நேரத்தில் ஏன் அழுகிறாய்?
கோலம்
கருப்பு வளையல் கையுடன்ஒருத்திவளைந்து, நெளிந்துப்பெருக்கிப்போனாள்,
வாசல் சுத்தமாச்சு.
மனம் குப்பையாச்சு.
சாமி
எங்கள் குடிசையில்அடிக்கடி சாமி ஆடுவாள்அம்மா ஏனோ தெரியவில்லைஅன்றும் இன்றும்குடிசைக்கே வருகிறது சாமிமாடிக்கே போகிறது வரம்
கொலை
ஒரு நாள் வாழ்க்கை பூவுக்கு...விரியுமுன்பே பறித்துஇனறவனுக்கு அர்ச்சனைசெய்கிறான்நூறாண்டு வாழ்ககை வேண்டிதனக்கு
-காசிஆனந்தன்
மனிதன்
இவன் பசுவின் பாலைக்கறந்தால்பசு பால் தரும் என்கிறான்.காகம் இவன் வடையை எடுத்தால்காகம் வடையை திருடிற்று என்கிறான்இப்படியாக மனிதன்....
கூண்டு
விடுதலை ஆவாரா சிறையில்இருந்து என்கணவர்?சோதிடம கேட்கிறாள்கூண்டுக்கிளியிடம்
யாமிருக்க பயம் ஏன்
ஆறுபடை முருகன் கோவிலுக்கு ஏலு பூட்டு........ ''யாமிருக்க பயம் ஏன்''
படிப்பு
தலைகுனிந்துஉன்னைபடித்தேன்!இன்று பலர்என்னைதலைநிமிர்ந்துபார்க்கச்செய்தாய்!
No comments:
Post a Comment