Saturday, 21 March 2009

கதை கேளு, கதை கேளு!


கதை கேளு, கதை கேளு!

(ஒரு வரி மட்டும் விடுபட்ட கதை)

ஒரே ஒரு ஊரிலே 
யுவன் ஒருவன் இருந்தான்;
அவன் கை நிறைய சம்பாதிக்க,
விமரிசையாய் திருமணம் நடக்க,
சென்றன நாட்கள் உல்லாசமாக.


அன்பாய் இருந்தாள் அழகு மனைவி;
உயிராய் இருந்தான் அவனும் அவள் மேல்;
இல்லறம் சிறந்து குழந்தையாய் மலர,
நன்றி சொன்னான் ஆண்டவனுக்கு அடிக்கடி.
( .................. ................. ............... )


தாமதமாய் வீடு வந்தான் அவ்வப்போது;
இரவுச் சாப்பாட்டை தவிர்த்தான் வீட்டில்;
எரிந்து விழுந்தான் மனைவியிடம் அடிக்கடி;
வீடு வந்தான் சில நாட்கள் தள்ளாடியபடி.


மனைவியை அடித்தான் கோபத்தில் ஒரு நாள்;
டிமிக்கி கொடுத்தான் வேலைக்கு அவ்வப்போது;
தினமும் கிடைத்தது அடி உதை அவளுக்கு; 
காணாமல் போயின ஒவ்வொன்றாய் பொருட்கள்.


வேலை போனது கவனக் குறைவால்;
ஓடிப்போனாள் மனைவியும் ஒரு நாள்;
அரசு கடையே கதி என்று கிடந்தான்;
கிழவனானான் முப்பது வயதில்;


விழுந்து கிடந்தான் தெருவில் பாதி நாள்;
விடியலில் ஒரு நாள் பேருந்தில் அரைபட்டான்; 
கதையும் முடிந்தது, கத்தரிக்காயும் காய்த்தது!


கதையில் விட்டுப்போன பத்தாவது வரி:
"நண்பனுடன் ஒருநாள் 
விளையாட்டாய் தண்ணியடித்தான்.

1 comment:

Anonymous said...

Good one :) Keep going Ravi